Skip to main content

Posts

Showing posts with the label mythology stories

Himalayan blunder

 இந்த குறிப்புகள் ஹிமாலயன்  பிளண்டர் என்ற புத்தகத்திலிருந்து  எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் போர்கைதிகளின் சிறைசாலையில் பிறந்தது.டால்வி இந்தியராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்தவர்.திபெத் சிறைசாலையில் இருந்த பொழுது சீன அதிகாரி ஒருவர் ஆயிரம் வருடங்களாக இந்தியாவும் சீனாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன.இந்தியஅரசாங்கம் தோல்வியை ஒப்பு கொண்டதன் காரணமாக இந்தியர்களுக்கு விடுதலை அளிக்க சீன அரசாங்கம் ஒப்பு கொண்டது.சீனப்படைகள் பின்வாங்கிவிட்டன எனக்கூறினார்.விடுதலை செய்யப்பட்ட பின்னர் டால்வி இராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்த ஜெனரல் ஜவுத்ரியை சந்தித்தார்.ஜவுத்ரி பழைய தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருக்க போரைப்பற்றிய அறிக்கை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினார்.மேலும் அவர் சொல்லக்கூட விரும்பாத சில நாடுகளின் ஏளனத்திற்கு நமதுநாடு உள்ளாகியிருப்பதாக கூறினார்.இது முழுக்க முழுக்க நமதுநாட்டின் தோல்வி .மொத்தத்தில் இது ஹிமாலயன் பிளண்டர்.      துறவிகள் நகரமான டோவாங் எவ்வித சண்டையும் இல்லாமல் சீனாவிடம் சரணடைந்தது.எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே சீன இராணுவப்படைகள் இ...

கண்ணன் கதைகள்-குழந்தை பருவம்

முன்னொரு காலத்தில் ஹம்சன் என்ற அரசன் மதுராவை ஆண்டு வந்தான்.அவனுக்கு தேவகி என்றொரு சகோதரி இருந்தாள்.தனது சகோதரியிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்தான்.அவனது சகோதரிக்கு வசுதேவர் என்பவருடன் ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்தார்.திருமணம் முடிந்து ஊர்வலம் செல்லும் பொழுது ஹம்ஷன் தேரோட்டி சென்றான்.திடீரென வானில் கேட்ட அசரீரி தேவகியின் எட்டாவது மகனால் ஹம்ஷன் இறப்பான் எனக்குறிப்பிட்டது. இதைக்கேட்ட ஹம்ஷன் அதிர்ச்சி அடைந்தான்.மேலும் ஆத்திரமுற்ற அவன் தனது தங்கையை கொல்ல முயன்றான்.அருகிலிருந்த வசுதேவர் அவனை தடுத்து தேவகியின் குழந்தைகளை அவனிடம் ஒப்படைப்பதாகக்கெஞ்சினார்.இதனால் மனம் மாறிய ஹம்ஷன் தேவகியை கொல்வதைத்தவிர்த்து தேவகியையும் வசுதேவரையும் சிறையிலடைத்தார். 1 வசுதேவரின் ஆறு குழந்தைகளையும் ஹம்ஷன் இரக்கமின்றி கொன்றான்.ஏழாவது குழந்தையை யாருக்கும் தெரியாமல் கருவில் இடம் மாற்றினர்.பின்னர் நள்ளிரவு நேரத்தில் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார்.ஆனால் அக்குழந்தையை ஹம்ஷன் கொன்றுவிடுவான் என்று அஞ்சிய வசுதேவர் குழந்தையை இரவோடு இரவாக இடம்மாற்ற எண்ணிணார்.அதற்காக தனது நண்பரான நந்தகோபரின் வீட்டை தேர்வு செய்தார்.அதே ந...